புதுச்சேரி

கோப்பு படம்.

பாட்டுப்பாடி கிண்டல் செய்தவர் கைது

Published On 2023-04-01 10:51 IST   |   Update On 2023-04-01 10:51:00 IST
  • புதுவை பஸ் நிலையத்தில் இருந்து கனகசெட்டிக்குளத்துக்கு ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தது.
  • காலாப்பட்டு போலீசாரிடம் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் முறையிட்டனர்.

புதுச்சேரி:

புதுவை பஸ் நிலையத்தில் இருந்து கனகசெட்டிக்குளத்துக்கு ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பெண்களை ஒருவர் பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டே வந்தார்.

பஸ் கனகசெட்டிக் குளத்தை வந்தடைந்ததும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட காலாப்பட்டு போலீசாரிடம் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் முறையிட்டனர்.

இதையடுத்து பெண்களை கிண்டல் செய்த வரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கோட்டக்குப்பத்தை அடுத்த பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த அய்யப்பன்(45) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News