புதுச்சேரி

குழந்தைகள் சண்டையை சமாதானம் செய்த தந்தை மீது தாக்குதல்

Published On 2024-04-16 08:44 GMT   |   Update On 2024-04-16 08:44 GMT
  • காயம் அடைந்த அந்தோணிராஜ், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
  • புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிவருகின்றனர்.

காரைக்கால்:

காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 38). இவரது மனைவி அனுசியா. இவர்களுக்கு அந்தோஸ் (9), மித்ரா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளது. அந்தோணிராஜ் கூலி வேலை செய்து வருகிறார்.

அந்தோணிராஜின் குழந்தை அந்தோஸ் அருகில் உள்ள மார்க்கெட் கமிட்டி திடலில் சக குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்தோணிராஜ், ஏன் உங்களுக்குள் சண்டை போட்டுகொள்கிறீர்கள் என சமாதானம் செய்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த சந்தோஷ், நீ யாருடா என ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் அந்தோணிராஜின் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

இதில், காயம் அடைந்த அந்தோணிராஜ், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News