புதுச்சேரி

பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் வந்த ஓட்டலுக்கு துர்கா ஸ்டாலின் வந்ததால் பரபரப்பு

Published On 2022-07-02 07:58 GMT   |   Update On 2022-07-02 07:58 GMT
  • என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓட்டலில் திரண்டிருந்தனர்.
  • இந்நிலையில் காலை 11 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓட்டலுக்கு வந்தார்.

புதுச்சேரி:

பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதற்காக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓட்டலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் காலை 11 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓட்டலுக்கு வந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் லிப்டில் ஏறி அறைக்கு சென்ற அவர் 10 நிமிடத்துக்கு பின் மீண்டும் காரில் ஏறிச்சென்றுவிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் வந்தார்.

கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் ஓட்டலுக்கு வந்து சென்றதாக தெரிகிறது.

Tags:    

Similar News