புதுச்சேரி

மணக்குள விநாயகர் கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த தமிழர் விழாவை கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழர் விழா

Published On 2023-01-13 10:32 IST   |   Update On 2023-01-13 10:32:00 IST
  • புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இலக்கிய தறை சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர் விழா என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் தமிழர் பெருமையை போற்றும் வகையில் தமிழர் கோவில் வழிபாடு, தமிழர் அரவை, தமிழர் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இலக்கிய தறை சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர் விழா என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி ேகசவன் ஆகியோர் வாழ்த்துக்களுடன் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார்.

பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சி டீன் கைலாசம், வேளாண் கல்லூரி டீன் முகமது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழர் பெருமையை போற்றும் வகையில் தமிழர் கோவில் வழிபாடு, தமிழர் அரவை, தமிழர் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த 14 அரங்குகளில் முதல் 3 இடங்களை பிடித்த அரங்குகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் இளமாறன், ராஜேந்திரன், வனிதா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News