என் மலர்
நீங்கள் தேடியது "Manakula Vinayakar College"
- புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இலக்கிய தறை சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர் விழா என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் தமிழர் பெருமையை போற்றும் வகையில் தமிழர் கோவில் வழிபாடு, தமிழர் அரவை, தமிழர் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இலக்கிய தறை சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர் விழா என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி ேகசவன் ஆகியோர் வாழ்த்துக்களுடன் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார்.
பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சி டீன் கைலாசம், வேளாண் கல்லூரி டீன் முகமது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழர் பெருமையை போற்றும் வகையில் தமிழர் கோவில் வழிபாடு, தமிழர் அரவை, தமிழர் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த 14 அரங்குகளில் முதல் 3 இடங்களை பிடித்த அரங்குகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் இளமாறன், ராஜேந்திரன், வனிதா ஆகியோர் செய்திருந்தனர்.
- 141 யூனிட் ரத்தம் விழுப்புரம் மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக அளிக்கப்பட்டது.
- நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.
புதுச்சேரி:
உலக தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரி, இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளை, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி ரத்த வங்கி, இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடந்த முகாமை, கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி தொடங்கி வைத்தார்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், கோபால், முகமது யாசின், சிதம்பரம், சந்திரசேகர், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன் பங்கேற்றனர்.
தன்னார்வலர்கள் அளித்த 141 யூனிட் ரத்தம் விழுப்புரம் மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக அளிக்கப்பட்டது.
இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் கிளை நிர்வாகிகள் திருமாவளவன், தங்கராஜ், சவுந்தர்ராஜன், செல்வக்குமார். செஞ்சிலுவை சங்கம் பிரிவு பொறுப்பாளர் சிவகங்கா, டாக்டர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.






