சிவா எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த காட்சி.
சுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம்
- ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 21 -ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தேர் திருவிழா நடந்தது.
- தேரோட்டத்தில் அப்பகுதியை சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூன் சுந்தரமூர்த்தி விநாயகர்புரம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 21 -ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தேர் திருவிழா நடந்தது.
இத்தேரோட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தார்.
தேரோட்டத்தில் அப்பகுதியை சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இத்தேரானது சிவசுப்பிரமணிய கோவிலில் இருந்து புறப்பட்டு வில்லியனூர் மாட வீதியை சுற்றி வந்தது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் மற்றும் சுந்தரமூர்த்தி விநாயகர்புரம் நகரவாசிகள் செய்திருந்தனர். விழாவில் ஆலய அர்ச்சகர்கள் மகாகணபதி உபாசகர் சிவஸ்ரீ பாலசுப்ரமணியம் சிவாச்சாரியார், சிவஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் ஆகியோர் சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.