புதுச்சேரி

உலக சப்ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டியில் விக்னேஷ்வரன், அதியமான் பங்கேற் உள்ளனர்.

உலக சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டிக்கு மாணவர்கள் நெதர்லாந்து பயணம்

Published On 2023-07-09 10:56 IST   |   Update On 2023-07-09 10:56:00 IST
  • நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கிராம மக்கள் நேரிலும் சமூக வளைதளத்திலும் பாராட்டி வருகின்றனர்.

புதுச்சேரி:

18-வது உலக சப்ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டி நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் மதிகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்புரமணியன் என்பவரின் 12-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ்வரன் (வயது16) மற்றும் பாகூர் தொகுதி குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ஜோதிபாசு மகன் அதியமான் (வயது 16) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கிராம மக்கள் நேரிலும் சமூக வளைதளத்திலும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News