புதுச்சேரி

கோப்பு படம்.

பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-29 11:20 IST   |   Update On 2023-07-29 11:20:00 IST
  • இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மாநில செயலாளர் பிரவீன்குமார், துணை தலைவர் அபிஜித் கண்டன உரையாற்றினர்.

புதுச்சேரி:

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

இந்த அறவிப்பை கண்டித்தும், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த க்கூடாது என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோபி தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் பிரவீன்குமார், துணை தலைவர் அபிஜித் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் வந்தனா, சாய், விஜீஷ், நூருதீன் உட்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News