அக்குபஞ்சர் நிபுணர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
குழந்தையின்மைக்கான சிறப்பு பயிற்சி
- அக்குபஞ்சர் என்ற கட்டுரையை உலக அக்குபஞ்சர் கருத்தரங்கில் சீனாவில் சமர்ப்பித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.
- அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறையில் 100-க் கும் மேற்பட்ட குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.
புதுச்சேரி:
மருத்துவத்துறையில் குழந்தையின்மை என்பது தொடர் கதையாகவே உள்ளது. இதில் பேராசிரியை டாக்டர் உஷா ரவி கடந்த 2000-ம் ஆண்டில் பைபாஸ் அக்குபஞ்சர் என்ற கட்டுரையை உலக அக்குபஞ்சர் கருத்தரங்கில் சீனாவில் சமர்ப்பித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.
மேலும் கோவை ராஜராஜேஸ்வரி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரங்கநாயகி ஆங்கில மருத்துவதுறையில் முன்னோடியானவர். அவருடன் இணைந்து அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறையில் 100-க் கும் மேற்பட்ட குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.
அனுபவ அடிப்படையிலும், ஆரோக்கிய அறிவியல் ஆய்வின்படியும், அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பது குறித்து அக்குபஞ்சர் நிபுணர்களுக்கு டாக்டர் உஷாரவி பயிற்சி அளித்தார்.
கடலூரில் நடந்த இந்த பயிற்சியை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனரும், தலைவருமான சுசான்லி டாக்டர் ரவி தொடங்கி வைத்தார்.
முடிவில் கவுன்சிலின் பொருளாளர் டாக்டர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.