என் மலர்
நீங்கள் தேடியது "childlessness"
- அக்குபஞ்சர் என்ற கட்டுரையை உலக அக்குபஞ்சர் கருத்தரங்கில் சீனாவில் சமர்ப்பித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.
- அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறையில் 100-க் கும் மேற்பட்ட குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.
புதுச்சேரி:
மருத்துவத்துறையில் குழந்தையின்மை என்பது தொடர் கதையாகவே உள்ளது. இதில் பேராசிரியை டாக்டர் உஷா ரவி கடந்த 2000-ம் ஆண்டில் பைபாஸ் அக்குபஞ்சர் என்ற கட்டுரையை உலக அக்குபஞ்சர் கருத்தரங்கில் சீனாவில் சமர்ப்பித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.
மேலும் கோவை ராஜராஜேஸ்வரி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரங்கநாயகி ஆங்கில மருத்துவதுறையில் முன்னோடியானவர். அவருடன் இணைந்து அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறையில் 100-க் கும் மேற்பட்ட குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.
அனுபவ அடிப்படையிலும், ஆரோக்கிய அறிவியல் ஆய்வின்படியும், அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பது குறித்து அக்குபஞ்சர் நிபுணர்களுக்கு டாக்டர் உஷாரவி பயிற்சி அளித்தார்.
கடலூரில் நடந்த இந்த பயிற்சியை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனரும், தலைவருமான சுசான்லி டாக்டர் ரவி தொடங்கி வைத்தார்.
முடிவில் கவுன்சிலின் பொருளாளர் டாக்டர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.
- பவித்ரா கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருபுவனை சீனிவாசா நகரை சேர்ந்தவர் நிலவழகன். இவர் வில்லியனூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பவித்ரா (வயது 25). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அப்போதெல்லாம் பவித்ரா கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். பின்னர் நிலவழகன் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை இதுபோல் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதன் பின்னர் நிலவழகன் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டில் பவித்ரா இல்லை. கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி நிலவழகன் மாமியார் வீட்டில் போன் செய்து விசாரித்தார். ஆனால் பவித்ரா அங்கு செல்ல வில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் பவித்ரா இல்லை. இதையடுத்து நிலவழகன் தனது மனைவி மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






