என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
குழந்தை இல்லாததால் விரக்தி; இளம்பெண் மாயம்
- பவித்ரா கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருபுவனை சீனிவாசா நகரை சேர்ந்தவர் நிலவழகன். இவர் வில்லியனூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பவித்ரா (வயது 25). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அப்போதெல்லாம் பவித்ரா கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். பின்னர் நிலவழகன் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை இதுபோல் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதன் பின்னர் நிலவழகன் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டில் பவித்ரா இல்லை. கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி நிலவழகன் மாமியார் வீட்டில் போன் செய்து விசாரித்தார். ஆனால் பவித்ரா அங்கு செல்ல வில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் பவித்ரா இல்லை. இதையடுத்து நிலவழகன் தனது மனைவி மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






