புதுச்சேரி

கோப்பு படம்.

ரெஸ்டோ பார்களால் சமூக சீரழிவு

Published On 2023-05-29 11:14 IST   |   Update On 2023-05-29 11:14:00 IST
  • மார்க்சிஸ்டு கம்யூ. குற்றச்சாட்டு
  • பெண் குழந்தைகளுக்கு வைப்புத் தொகை நிதியும் அளிக்கவில்லை.

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார்பாளையம் அஜீஸ்நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

 மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி புதுவையில் 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக் கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

 கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத் தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.

ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திராகாந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ளது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News