புதுச்சேரி
சிவந்தி ஆதித்தனாரின் பெருமைகளை நினைவுகூருவோம்- புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
- "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
- ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் போற்றப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்ததிலும், ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக அவர் போற்றப்பட்டார்.
அவரது பெருமைகளை இன்றைய நாளில் நாம் நினைவு கூருவோம். அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.