புதுச்சேரி

கருத்தரங்குக்கு கல்லூரி டீன் டாக்டர் ராகேஷ் சேகல் தலைமை தாங்கி பேசிய காட்சி.

அறிவுசார் உரிமைகள் குறித்த கருத்தரங்கு

Published On 2023-06-23 11:12 IST   |   Update On 2023-06-23 11:12:00 IST
  • ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.
  • பொதுக்களத்தில் உள்ளவை தவிர, எந்தவொரு கண்டுபிடிப்பும் அல்லது புதுமையும் காப்புரிமை பெறலாம் என்பது பற்றி விளக்கினார்.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் ஆசிரியர்கள் , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுசார் சொத்து உரிமைகள் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்குக்கு கல்லூரி டீன் டாக்டர் ராகேஷ் சேகல் தலைமை தாங்கினார். சென்னை இன்டெலிபட் காப்புரிமை தீர்வுகள் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் தீபா, மருத்துவத் தொழிலில் அறிவுசார் சொத்து உரிமைகள் பெற எவ்வாறு தாக்கல் செய்வது, பொதுக்களத்தில் உள்ளவை தவிர, எந்தவொரு கண்டுபிடிப்பும் அல்லது புதுமையும் காப்புரிமை பெறலாம் என்பது பற்றி விளக்கினார்.

மேலும் பாரம்பரியமாக அறியப்பட்ட முறைகள் அதனை சார்ந்த கண்டுபிடிப்பு காப்புரிமை பெறாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் ஆலோசகர் டா க்டர் விஷ்ணு பட், உயர் மருத்துவ துறை டீன் மகா லட்சுமி, உதவி பேராசிரியர்கள் ஆர்த்தி, தியாகராஜன் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News