புதுச்சேரி
கோப்பு படம்.
ரேஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இதற்கு தடையாக உள்ள அரசு உயரதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
பாரதிய புதுவை ரேஷன்கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் மிஷன்வீதி மாதாகோவில் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சட்டசபையில் அறிவித்தபடி ரேஷன்கடைகளை திறந்து ஏழை மக்களுக்கு இலவச அரிசி, சிறுதானியங்கள், அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இதற்கு தடையாக உள்ள அரசு உயரதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.