புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய போது எடுத்தபடம்.

ரங்கசாமி தேசியக் கொடி வழங்கினார்

Published On 2022-08-11 08:04 GMT   |   Update On 2022-08-11 08:04 GMT
  • வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
  • நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தி தேசியக்கொடிகளை வழங்கினார்.

புதுச்சேரி:

நாட்டின் 75-வது சுதந்திர தினநாளையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தி தேசியக்கொடிகளை வழங்கினார்.

இதில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா , துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர், நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News