புதுச்சேரி

கிருமாம்பாக்கம் ராமானுஜர் சுவாமி 1006 ஆம் ஆண்டுபிறந்த நாள் விழா நடைபெற்றது.

ராமானுஜர் சுவாமி 1006 -ம் ஆண்டு பிறந்த நாள் விழா

Published On 2023-04-26 08:17 GMT   |   Update On 2023-04-26 08:17 GMT
  • திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
  • திருமங்கை ஆழ்வார் திருச்சபை மற்றும் கோவில் அறங்காவலர் குழு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

பாகூர் கொம்யூன் கிருமாம்பாக்கத்தில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் சமேதி சீனிவாசன் பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள மதத்தை மாற்றிய மகான் பாஷைக்காரர் உடையவர் எத்திராஜ் என்று பல பெயர்களால் போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜர் சுவாமி 1006-ம் ஆண்டு பிறந்த நாளை சித்திரை மாதமான திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளின் அனைத்து சன்னதி களிலும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கிருமா ம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீரா மானுஜர் சுவாமிக்கு பால், தயிர்,தேன் பன்னீர், சந்தான அபிஷே கத்தூள் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் திருமஞ்சனம் நடை பெற்றது.

அதனைத் தொடர்ந்து எம்பெ ருமான் ஸ்ரீ ராமா னுஜர் அவர்க ளுக்கு பூக்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமானுஜர் சுவாமியை வணங்கினர்.

அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்க ப்பட்டது இந்த ஏற்பாட்டினை திருமங்கை ஆழ்வார் திருச்சபை மற்றும் கோவில் அறங்காவலர் குழு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News