அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கிய காட்சி.
புதுவை அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்-பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்
- அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொது செயலாளர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கலாம் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
- பின்னர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொது செயலாளர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கலாம் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்று புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளம் தலைமைக் அலுவலகத்தில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலைக்கும், ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணை செயலாளர்கள், கருணாநிதி, குணசேகரன், காந்தி, கிருஷ்ணமூர்த்தி, குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உட்பட கட்சியினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் முத்தியா ல்பேட்டை மணிக்கூண்டு அருகே மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில்அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், விக்னேஷ் காசிநாதன், வில்லியனூர் மணி, கோபால், செல்வம், பரமசிவம், நாராயணசாமி, மோகன், செல்வம், விஸ்வநாதன், அந்துவான், மண்ணாங்கட்டி, தனலட்சுமி, ராதா, ஹரிகிருஷ்ணன், முனியாண்டி, வாசு, நடராஜன், ஆறுமுகம், பஞ்சவர்ணம், பச்சையப்பன், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.