புதுச்சேரி
அரசு பள்ளி இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்
- நேரு எம்.எல்.ஏ. சமரசம்
- அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக் குட்பட்ட சவரிராயுலு வீதியில் உள்ள திரு.வி.க. அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திரு.வி.க. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ. அங்கு சென்று கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
பள்ளி இடமாற்றம் குறித்து எம்.எல்.ஏவிடம் கூட தகவல் தெரிவிக்காதது ஏன்? என வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி தற்போதைய இடத்திலேயே செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.