புதுச்சேரி

புதுவை யூனியன் பிரதேச பொதுநல சங்க சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்த காட்சி.

பொதுநல சங்க சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

Published On 2023-06-23 11:50 IST   |   Update On 2023-06-23 11:50:00 IST
  • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
  • தொகுதி பொறுப்பாளர்கள் மாணவ-மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுநல சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதிக்குட்பட்ட தேங்காய் திட்டு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், வீராம்பட்டினம், மணவெளி, நோனாங்குப்பம்,தவளக்கு ப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2022-2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு யூனியன் பிரதேச பொதுநல சங்க தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மதிஒளி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் புத்துப்பட்டான் வரவேற்புரையாற்றினார்.

சங்க ஆலோசகர்களான தொழிலதிபர் அசோக் ராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ், சட்ட ஆலோசகர் வக்கீல் ஆறுமுகம், தாகூர் அரசு கல்லூரி பேராசிரியர் டாக்டர் பாலமுருகன், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், பாஸ்கோ துணை பொது மேலாளர் தினகரன், கோவிந்தசாமி, மாநில செயலாளர் கனகராஜ் பொருளாளர் சபாபதி மற்றும் அரியாங்குப்பம் மணவெளி தொகுதி தலைவர்கள் தங்கரத்தினம், வைத்தியநாதன், பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், சசிகுமார், தர்மா என்ற ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

முடிவில் மாநில துணைத்தலைவர் பூபாலன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில, தொகுதி பொறுப்பாளர்கள் மாணவ-மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News