என் மலர்
நீங்கள் தேடியது "Public Welfare Society"
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டி.
- பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டியை மக்கள் இன்னமும் தங்களின் வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இலவசம் என்றார்கள்...
பொழுதுபோக்கு என்றார்கள்...
கலைஞருக்கு மட்டுமே தெரிந்தது அது,
பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல் என்று,
பெண்கள் வெளியுலகை எளிதில் எட்டி பார்ப்பதற்கு உதவும் ஜன்னல் என்று.
உலக செய்திகளை, உலகத்தின் வளர்ச்சியை, மனிதனின் படைப்புகளை தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒளிக்கீற்று என்று.
தமிழினத்தை உலகம் போற்றும் மாபெரும் இனமாகவும் தமிழ்நாட்டை உலகே வியந்து பார்க்கும் வளர்ச்சியின் விளைநிலமாகவும் மாற்றக் கூடிய அற்புத விளக்கு என்று.
இலவசம் இல்லங்க அது.
மக்கள் நல திட்டம்.
பொழுதுபோக்கு இல்லைங்க அது,
பொது அறிவுப் பெட்டகம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
- தொகுதி பொறுப்பாளர்கள் மாணவ-மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுநல சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதிக்குட்பட்ட தேங்காய் திட்டு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், வீராம்பட்டினம், மணவெளி, நோனாங்குப்பம்,தவளக்கு ப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2022-2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு யூனியன் பிரதேச பொதுநல சங்க தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மதிஒளி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் புத்துப்பட்டான் வரவேற்புரையாற்றினார்.
சங்க ஆலோசகர்களான தொழிலதிபர் அசோக் ராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ், சட்ட ஆலோசகர் வக்கீல் ஆறுமுகம், தாகூர் அரசு கல்லூரி பேராசிரியர் டாக்டர் பாலமுருகன், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், பாஸ்கோ துணை பொது மேலாளர் தினகரன், கோவிந்தசாமி, மாநில செயலாளர் கனகராஜ் பொருளாளர் சபாபதி மற்றும் அரியாங்குப்பம் மணவெளி தொகுதி தலைவர்கள் தங்கரத்தினம், வைத்தியநாதன், பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், சசிகுமார், தர்மா என்ற ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
முடிவில் மாநில துணைத்தலைவர் பூபாலன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில, தொகுதி பொறுப்பாளர்கள் மாணவ-மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






