புதுச்சேரி

புதுச்சேரி அருகே கோவில் விழாவில் பாம்பு நடனமாடிய பூசாரிகள்

Published On 2024-05-22 05:32 GMT   |   Update On 2024-05-22 05:32 GMT
  • பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
  • மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி திருக்கனூர் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் செடல் உற்சவம் அய்யப்பனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்க லடன் தொடங்கியது. முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல் நடந்தது. நேற்று இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, வித்தியாசமான முறையில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் மூலம் நேரடியாக கிடைக்கக்கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சை, கொய்யா, நெல்கதிர், நுங்கு, வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளி, ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன.

வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நிகழச்சியில் பாம்பு போல நடனமாடி திருக்கல்யாண மாலையை இரு பூசாரிகள் எடுத்து சென்று சாமிகளுக்கு அணிவித்தனர். இதனை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தொடர்ந்து, மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.

Tags:    

Similar News