புதுச்சேரி
புதுச்சேரியில் சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுக்கு பணம் பட்டுவாடா: வாக்காளர்கள் மகிழ்ச்சி
- வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
- பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணாடிப்பட்டு, பாகூர், காமராஜர் நகர், திருபுவனை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, ஏம்பலம், மணவெளி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ரகசியமாக பணம் பட்டுவாடா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களிலும் பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.