புதுச்சேரி
கோப்பு படம்.
புதுவையில் தேசிய மக்கள் நீதிமன்றம்-10-ந் தேதி நடக்கிறது
- புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
- கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து உட்பட நேரடி வழக்குகள் தீர்வு காணப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவர் சஞ்சய்கிஷன் கவுல் உத்தரவின்பேரில் மாநில சட்டப்பணிகள் ஆணைய செயலர் தலைவர் மகாதேவன் வழிகாட்டுதலின்படி வருகிற 10-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவையில் நடக்கிறது.
4 பிராந்தியங்களிலும் அந்தந்த நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் மக்கள் நீதிமன்றத்தில் சமாதானம் ஆகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து உட்பட நேரடி வழக்குகள் தீர்வு காணப்படுகிறது.
இதில் தங்கள் வழக்குகளை சமாதானமாக தீர்க்க விரும்புவோர் வக்கீல்கள் மூலம் அணுகலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.