நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்
- புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத் துக்கு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பா ளர் கவுரி தலைமை தாங்கி னார்.
புதுச்சேரி:
மணிப்பூரில் மாநில பா.ஜனதா ஆட்சியில் நடை பெற்று வரும் பூர்வக்குடி பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் இதனை தடுத்து நிறுத்தாத மத்திய அரசை கண்டித்தும் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத் துக்கு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி தலைமை தாங்கினார். மகளிர் பாசறை நிர்வாகிகள் தேவிகா, பிரவினா, சுபஸ்ரீ முன்னிலை வகித்தனர். மகளிர் பாசறை யின் மேனகா நிர்மல் சசிகலா பிருந்தாவதி மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொருளாளர் இங்கோவன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பாசறை பொறுப்பாளர்கள் திருக்குமரன், திவாகர், ஜெகதீஷ், ஞானபிரகாசம், நிர்மல்சிங், வேலவன், கருணாநிதி, சுந்தர், மதிய ழகன், சந்துரு, கலிவரதன், அமுதன் பாலா காளிதாஸ் காமராஜ், பிரிய குமரன், சதிஷ், ஆனந்த், வீராசாமி, செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.