புதுச்சேரி

கனகன் ஏரியை முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் தூய்மைப்படுத்திய காட்சி.

முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள்

Published On 2023-07-10 13:47 IST   |   Update On 2023-07-10 13:47:00 IST
  • ஒரு டன்னுக்கும் மேலான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன.
  • மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜ மற்றும் கனகன் ஏரி தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 மணி நேரம் குளம், ஏரி இயற்கைச் சார்ந்த பகுதி களில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் முதல் நிகழ்ச்சியாக கனகன் ஏரியில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு டன்னுக்கும் மேலான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இப்பணியை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜ மற்றும் கனகன் ஏரி தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியை ஜெயந்தி செய்திருந்தார். 

Tags:    

Similar News