புதுச்சேரி

தமிழ்சங்க தலைவராக முத்து மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

புதுவை தமிழ்சங்க தலைவராக முத்து மீண்டும் தேர்வு

Published On 2023-05-29 14:07 IST   |   Update On 2023-05-29 14:07:00 IST
  • புதிய ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது.
  • புதுவை தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் 738 வாக்கு அளித்தனர்.

புதுச்சேரி:

புதுவை வெங்கட்டாநகரில் புதுவை தமிழ்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தமிழ்சங்கத்து க்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மன்ற குழு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தற்போது முத்து தலைமையிலான நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 2023-26-ம் ஆண்டுக்கான புதிய ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலில் முத்து தலைமையிலான செயற்பாட்டு அணி பெயரில் 11 பேரும், இந்த அணியை எதிர்த்து பாவேந்தர் பாரதிதாசன் பேரனும், புதுவை சிந்தனை யாளர் பேரவை தலைவருமான கோ.செல்வம் உள்பட 2 பேரும் போட்டி யிட்டனர்.

தேர்தலில் புதுவை தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் 738 வாக்கு அளித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 11 ஆட்சி குழு உறுப்பினர்களில் புதுவை தமிழ்ச்சங்க தலைவ ராக முத்து, துணை தலை வர்களாக ஆதிகேசவன், பாவலர் திருநாவுக்கரசு, செயலாளராக சீனு.மோகன்தாசு, பொருளா ளராக அருட்செல்வம், துணை செயலாளராக தினகரன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக தமிழ்மாமணி உசேன், கலை மாமணி ராசா, சுரேஷ்குமார், ஆசிவேந்திரன், கவிஞர் ஆனந்தராசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

2023- 2026 புதுவை தமிழ்ச்சங்க தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி மன்ற குழுவினரை தேர்தல் ஆணையர் வக்கீல் பிரபாகரன் அறிவித்தார்.

Tags:    

Similar News