புதுச்சேரி

கோப்பு படம்.

முருங்கப்பாக்கம் மார்க்கெட்டை சீரமைக்க வேண்டும்

Published On 2023-07-22 05:01 GMT   |   Update On 2023-07-22 05:01 GMT
  • பா.ஜனதா வலியுறுத்தல்
  • நகராட்சியால் கட்டப்பட்டுள்ள முருங்கப்பாக்கம் மார்க்கெட் செயல்படாமல் உள்ளதே முக்கிய காரணமாக உள்ளது.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-

புதுச்சேரி- கடலூர் சாலையில் இருந்து கொம்பாக்கம் செல்லும் முருங்கப்பாக்கம் சந்திப்பில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் அப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு புதுச்சேரி நகராட்சியால் கட்டப்பட்டுள்ள முருங்கப்பாக்கம் மார்க்கெட் செயல்படாமல் உள்ளதே முக்கிய காரணமாக உள்ளது.

மார்க்கெட்டில் மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் வியாபாரிகள் கொம்பாக்கம் சாலை ஓரத்தில் கடைகளை வைத்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நகராட்சி அதிகாரிகளின் பொறுபபற்ற செயலால் முருங்கப்பாக்கம் பகுதி மக்கள் மட்டுமின்றி கொம்பாக்கம் வழியாக செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே முருங்கப்பாக்கம் மார்க்கெட்டை சீரமைத்து மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்து. சாலையோர வியாபாரிகளை மார்க் கெட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News