புதுச்சேரி

வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா கொசு மருந்து அடித்த காட்சி.

டெங்கு பரவலை தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி

Published On 2023-10-17 12:17 IST   |   Update On 2023-10-17 12:17:00 IST
  • புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.
  • இதனால் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

புதுச்சேரி,:

புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதனால் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. இணைச் செயலாளர் லாவண்யா மற்றும் மாரி ஆறுமுகம் ஆகியோர் ஏற்பாட்டில் உழவர்கரை தொகுதியில் கொசு மருந்து அடிக்கப்ப ட்டது. தொகுதியில் உள்ள லாம்பர்ட் சரவணன் நகர், ஜவகர் நகர், ஜெயா நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த கொசு மருந்து அடிக்கும் பணியை வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர், தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பணி உழவர்கரை தொகுதி முழுவதும் தொடர்ந்து நடைபெறும். நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, சதீஷ்குமார் மற்றும் சிவக்குமார், உழவர்கரை நிர்வாகிகள் கில்பர்ட், அருள்ராஜ், சக்திவேல், சண்முகம், குமரேசன், சபர், பிரவீண், குமார், முத்துபாண்டி, அன்புசரளா, அமலா, உமா, சந்திரா, மாலதி, ஜூலி, புஷ்பா, மரி, ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News