புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்த போது எடுத்த படம்.

எம்.ஐ.டி. கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

Published On 2023-11-11 04:11 GMT   |   Update On 2023-11-11 04:11 GMT
  • மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி னார்.
  • புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாற்றினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி (எம்.ஐ.டி) இயந்திரவியல் துறை, இந்திய பொறியாளர் அமைப்பு மாணவர் பிரிவு சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங் கம் நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி, பொரு ளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இயந்திர வியல் துறை தலைவர் ராஜாராம் வரவேற்றார். புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாற்றினார்.

கருத்தரங்கில் அனைத்து துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இயந்திர வியல் துறை உதவி பேரா சிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார். கருத்த ரங்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுமித்ரா, சிவராமகிருஷ் ணன் ஆகியோர் செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News