புதுச்சேரி

200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கிய காட்சி.

200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்

Published On 2023-07-03 09:06 GMT   |   Update On 2023-07-03 09:06 GMT
  • மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சம்பத், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • வட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் சேவைப் பணிகளை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவராக முகமது அசாருதீன், செயலாளராக இளங்கோவன், பொருளாளராக செல்வகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் பதவியேற்பு விழா திருக்க னூர் போன் நேரு மேல்நி லைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைவர் முகமது அசாருதீன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சம்பத், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன், சரவணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினர். முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் சேவைப் பணிகளை தொடக்கி வைத்தார்.

விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டியதுடன், 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர் புஷ்ப ராஜ், வட்டார தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News