புதுச்சேரி
கூட்டுறவு ஊழியர்களுக்கு தியான பயிற்சி
- புதுவை கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் ஒரு நாள் பிரம்மகுமாரிகள் ராஜயோக தினயான நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
- பேராசிரியர் ரங்கநாதன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
புதுச்சேரி:
புதுவை கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் ஒரு நாள் பிரம்மகுமாரிகள் ராஜயோக தினயான நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது. பேராசிரியர் ரங்கநாதன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தியான நிறுவனம் கவிதா பயிற்சி அளித்தார்.
இதில் மனதை எப்படி, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது, ஆரோக்கியான வாழ்வுக்கான வழிகள், நேர்மறையான சிந்தனை, தனிமனிதமேம்பாடு, சமுதாயமேம்பாட, கோபத்தை கட்டுப்படுத்துதல், மனதின் ஆற்றலை பெருக்குதல் உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் நகை மதிப்பீட்டாளர்கள் 40 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை தியான நிறுவன வெங்கடேசன் ஒருங்கிணைத்தார். விழா ஏற்பாடுகளை ஊழியர்கள் செய்திருந்தனர்.