புதுச்சேரி

கோப்பு படம்.

மருத்துவ கலந்தாய்வை சென்டாக் அதிகாரிகள் இழுத்தடிப்பு

Published On 2023-10-21 11:39 IST   |   Update On 2023-10-21 11:39:00 IST
  • வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
  • சுயலாப நோக்கோடு திட்டமிட்டு மருத்துவ கலந்தாய்வை சென்டாக் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மருத்துவ ஆணையம் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முடிக்க உத்தரவிட்டது. ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாகவும், சுயலாப நோக்கோடு திட்டமிட்டு மருத்துவ கலந்தாய்வை சென்டாக் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.

 இந்திய மருத்துவ மையம், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு என்பதால், செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி யில்லை என திட்டவட்டமாக இப்போது அறிவித்துள்ளது. சென்டாக் அதிகாரிகளின் அலட்சியத்தால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.கூடுதல் கால அவகாசம் பெற்று மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News