புதுச்சேரி

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-22 14:26 IST   |   Update On 2022-12-22 14:26:00 IST
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • பாகூர் குருவிநத்தம் பெரியார் நகரில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் அரிதாஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர். பாகூர் குருவிநத்தம் பெரியார் நகரில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

Similar News