search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist demonstration"

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாகூர் குருவிநத்தம் பெரியார் நகரில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் அரிதாஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர். பாகூர் குருவிநத்தம் பெரியார் நகரில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.
    • முத்தியால்பேட்டை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஜந்தா சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.

    இங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் முத்தியால்பேட்டை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஜந்தா சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு துணை செயலாளர் பாரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் மதிவாணன், பிரதேச கமிட்டி சரவணன். நகர குழு உறுப்பினர் மணவாளன் வனஜா, முத்துகிருஷ்ணன், மனோகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    அடாவடி நடவடிக்கையில் இறங்கும் கவர்னர் புதுவையை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண் பேடியின் செயல்பாடுகள் பா.ஜனதா கட்சியை வளர்ப்பது போன்ற நடவடிக்கையாக இருப்பதாகவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

    நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் அங்கீகரிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவு பிறப்பித்ததற்கும் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    அத்துமீறி அடாவடி நடவடிக்கையில் இறங்கும் கவர்னர் புதுவையை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நேருவீதி, மி‌ஷன் வீதி சந்திப்பில் புறப்பட்ட ஊர்வலத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் நிலவழகன், தமிழ்செல்வன், நகர கமிட்டி மதிவாணன், நடராஜன், சத்யா, ராமசாமி, அன்புமணி மற்றும் பலர் பங்கேற்றனர். ஊர்வலம் ஜென்மராக்கினி கோவில் வீதி வழியாக வந்தது. அவர்களை ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கவர்னரை வெளியேறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். #tamilnews
    ×