புதுச்சேரி

மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-19 14:44 IST   |   Update On 2022-10-19 14:44:00 IST
  • புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.
  • முத்தியால்பேட்டை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஜந்தா சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.

இங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் முத்தியால்பேட்டை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஜந்தா சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு துணை செயலாளர் பாரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் மதிவாணன், பிரதேச கமிட்டி சரவணன். நகர குழு உறுப்பினர் மணவாளன் வனஜா, முத்துகிருஷ்ணன், மனோகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

Similar News