பழங்குடியின மக்கள் வீடு கட்டுவதற்கான ஆணையை ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி வழங்கினார்.
பழங்குடியின மக்கள் வீடு கட்ட ஆணை
- திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் 22 பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா ரூ. 3 லட்சம் வீதத்திற்கான ஆணையை வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி வழங்கினார்.
- இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் 22 பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா ரூ. 3 லட்சம் வீதத்திற்கான ஆணையை வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி வழங்கினார்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிவாசகம், முருகன் பொறியாளர்கள் பாஸ்கர், சக்திவேல், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மோகனா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தி.மு.க. ஒன்றிய சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ஹென்றிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலர் ஏழுமலை நன்றி கூறினார்.