கோப்பு படம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி- 14-ந் தேதி அணிவகுப்பு பேரணி
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில, உயர் நிலைக்குழு மற்றும் மாநிலச் செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- காரைக்கால் மதகடியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை நோக்கி ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும்.
புதுச்சேரி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில, உயர் நிலைக்குழு மற்றும் மாநிலச் செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சி மேலிட பொறுப்பாளர்கள் கருத்தியல் பரப்பு மாநிலச் செயலாளர் சிபிச்சந்தர், புதுவை-தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் தலையாரி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அம்பேத்கர் பிறந்த நாளில் மத்திய அரசின் போக்கை கண்டித்தும், மாநில பா.ஜனதா - என்.ஆர்.காங்கிரஸ் அரசை கண்டித்து 14-ந் தேதி 10 மணியளவில் சுதேசி பஞ்சாலையிலிருந்து புதுவை சட்டப்பேரவை அம்பேத்கர் சிலை நோக்கியும், காரைக்கால் மதகடியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை நோக்கி ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும்.
முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் நடைபெறும் அணிவகுப்பை கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் சிபிச்சந்தர், தலையாரி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைப்புச் செயலாளர் அமுதவன், பொருளாளர் பாத.தமிழ்மாறன், தொண்டரணி முதன்மைச் செயலாளர் பொதினிவளவன், அரசியல் குழு மாநில துணைச் செயலாளர் முன்னவன், தலைமை நிலையச்செயலாளர் செல்வ.நந்தன், தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் அரிமாத்தமிழன், கருத்தியல் பரப்பு மாநிலச் செயலாளர் ஆதவன், ஊடக பிரிவு மாநிலச் செயலாளர் கார்முகில் உட்பட, துணைநிலை அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள் மற்றும் தொகுதிச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை அலுவலகச் செயலாளர் எழில்மாறன் நன்றி கூறினார்