கோப்பு படம்.
- போலீசார் விசாரணை
- சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமானார்.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு துருவை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை.
இது குறித்து மாணவியின் தாய் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், காணாமல் போன அன்று மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் ராயபுதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும் அவரது நண்பர் ஒருவரும் பைக்கில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து 2 பேர் மீதும் கடத்தல் பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.