புதுச்சேரி

சார்காசிமேடு கிராமத்தில் கபடி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கோப்பை வழங்கிய காட்சி.

சார்காசிமேடு கிராமத்தில் கபடி போட்டி

Published On 2023-06-12 08:38 GMT   |   Update On 2023-06-12 08:38 GMT
  • லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கோப்பை வழங்கினார்
  • இதற்கான ஏற்பாடுகளை பி.ஆர், மற்றும் யு.எல்.கே. பிரதர்ஸ் விளையாட்டு குழு பாபு தலைமையில் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

ஏம்பலம் தொகுதி சார்காசிமேடு கிராமத்தில் கபடி போட்டி தொடங்கியது. துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் புதுவை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 அணிகள் பங்கேற்றன.

முதல் இடத்தை சார்காசிமேடு அணியும், 2-வது இடத்தை பாக்கம் கூட்ரோடு அணியும், 3-வது இடத்தை பாகூர் அணியினர் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கினார்.

மேலும் கிராமத்தில் உள்ள 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவித்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பி.ஆர், மற்றும் யு.எல்.கே. பிரதர்ஸ் விளையாட்டு குழு பாபு தலைமையில் செய்திருந்தனர்.

Tags:    

Similar News