புதுச்சேரி
null

யோகாவை உலகம் முழுவதும் செய்வது இந்தியாவுக்கு பெருமை: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2024-01-05 05:07 GMT   |   Update On 2024-01-05 05:08 GMT
  • உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
  • சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

இதன் தொடக்க விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

யோகா என்பது மனதும், உடலும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது ஆகும். உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். யோகாசனம் செய்யும் போது மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகமாக இருக் கும்.

மூளையில் உள்ள செல்கள் உற்சாகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் யோகா செய்வது மிகமிக முக்கியம். தினமும் யோகா செய்தால் மனிதனுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு யோகா நமது உடலையும், மனதையும் மிகத் தெளிவாக எடுத்துச்செல்கிறது.

நம்மை அமைதியாக வைக்கிறது. நம் நாட்டில் செய்த யோகா கலையை இன்று உலகம் முழுவதும் செய்கிறார்கள் என்றால் அதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

யோகா விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 600 யோகா கலைஞர்கள் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News