புதுச்சேரி

வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடந்த போது எடுத்த படம்.

வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்

Published On 2023-10-12 11:59 IST   |   Update On 2023-10-12 11:59:00 IST
  • இந்திய அளவில் 15 துக்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
  • மாணவர்கள் பங்கு பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் அரியூரில் உள்ள வெங்கடே ஸ்வரா பிசியோதெரபி கல்லூரியில் சர்வதேச அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கம் கல்லூரியில் உள்ள சாய் அரங்கில் நடைபெற்றது.

அரியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டு தலின்படி நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரத்தினசாமி, கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகர் டாக்டர்.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தனர்.

கருத்தரங்கத்தில் இந்திய அளவில் 15 துக்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உலக அளவில் ஆராய்ச்சி யை மேற்கொள்ளும் பிசியோ தெரபி மருத்துவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு தங்களது ஆரா ய்ச்சிக்கான முடிவினை விளக்கமாக கூறினார்கள்.

கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர். பரணிதரன், டாக்டர்.ஆனந்த் பாபு, பேராசிரி யர்கள், மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்கள்.

பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் கணேஷ்குமார் அனைவரை யும் வரவேற்று பேசினார்.

கருத்தரங்கில் இயன் முறை மருத்துவத்தில் உள்ள சமீபத்திய ஆய்வு கட்டுரைகள், ஆராய்ச்சி விளக்கங்கள், சுவரொட்டி விளக்கக் காட்சியும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டி ருந்தது.

மேலும் மாணவர்கள் பங்கு பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

முடிவில் பிசியோதெரபி இணை பேராசிரியர் டாக்டர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News