என் மலர்
நீங்கள் தேடியது "Venkateswara College"
- கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் வாழ்த்தி பேசினார்.
- மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை பதிவாளர் தட்சணாமூர்த்தி பங்கேற்ற–வர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் வெங்க டேஷ்வரா கல்வியியல் கல்லுாரியில் 'கற்பித்தலில் புதுமைகள்' தலைப்பில் மாநில அளவிலான கல்வி கருத்தரங்கம் நடந்தது.
கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் வாழ்த்தி பேசினார். துணைத்தலைவர் எஸ்.வி. சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகர் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கல்லுாரியின் முதல்வர் டையன் ஜோசப் வரவேற்றார். கருத்தரங்கில் கல்லூரி யின் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள்
100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தற்கால சூழல்களில் கற்பித்தல் முறைகளை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கைநுட்பம், செயற்கை நுண்ணறிவு, குறித்து சி.கே கல்வியியல் கல்லூரி முதல்வர் சிங்கரவேலன், சிகா கல்வியியல் கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார், வாசவி கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் துளசிராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை பதிவாளர் தட்சணாமூர்த்தி பங்கேற்ற–வர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவர் சிவசண்முகநாதன் தொகுத்து வழங்கினார்.
ஆங்கிலத்துறை பேராசிரி யர் ஈவா எழில்மலர் நன்றி கூறினார்.
- இந்திய அளவில் 15 துக்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் பங்கு பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் அரியூரில் உள்ள வெங்கடே ஸ்வரா பிசியோதெரபி கல்லூரியில் சர்வதேச அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கம் கல்லூரியில் உள்ள சாய் அரங்கில் நடைபெற்றது.
அரியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டு தலின்படி நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரத்தினசாமி, கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகர் டாக்டர்.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தனர்.
கருத்தரங்கத்தில் இந்திய அளவில் 15 துக்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உலக அளவில் ஆராய்ச்சி யை மேற்கொள்ளும் பிசியோ தெரபி மருத்துவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு தங்களது ஆரா ய்ச்சிக்கான முடிவினை விளக்கமாக கூறினார்கள்.
கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர். பரணிதரன், டாக்டர்.ஆனந்த் பாபு, பேராசிரி யர்கள், மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்கள்.
பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் கணேஷ்குமார் அனைவரை யும் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கில் இயன் முறை மருத்துவத்தில் உள்ள சமீபத்திய ஆய்வு கட்டுரைகள், ஆராய்ச்சி விளக்கங்கள், சுவரொட்டி விளக்கக் காட்சியும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டி ருந்தது.
மேலும் மாணவர்கள் பங்கு பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
முடிவில் பிசியோதெரபி இணை பேராசிரியர் டாக்டர் பால்ராஜ் நன்றி கூறினார்.






