புதுச்சேரி

கோப்பு படம்.

அமுதசுரபியை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும்

Published On 2023-04-29 13:28 IST   |   Update On 2023-04-29 13:28:00 IST
  • அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
  • அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆகாது என்பதை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உணர வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமுதசுரபி ஊழியர்கள் தொடர் போராட்டத்தின் உச்சமாக தங்களது உயிரை பணயம் வைத்து விஷ பொருளை அருந்தி விட்டனர்.

அரசு சார்பு நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை துறை சார்ந்த அமைச்சரிடமும், தலைமைச் செயலாளரிடமும், முதல்-அமைச் சரிடமும் முறையிட்டு தீர்வு காண்பது என்பது நியாயமான ஒன்றாகும்.

அதை தவிர்த்து இதுபோன்ற விஷம் அருந்துவதால் அதுவே அனைத்து பிரச்சனை களுக்கும் தீர்வு ஆகாது என்பதை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உணர வேண்டும்.

இந்த பிரச்சினையில் அரசு சார்பு கூட்டுறவு ஊழியர்களின் நிலை உணர்ந்து முதல்-அமைச்சர் ஊழியர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களுக்கு மனிதா பிமான அடிப்படையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்.

புதுவை மாநிலத்திற்கு அடையா ளமாக செயல் பட்டு வந்த அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தை செம்மையாக நடத்த போதிய நிதி உதவியை அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

அந்த நிறுவனத்தை நிர்வாகிக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை சேர்மனாக முதல்-அமைச்சர் நியமனம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News