புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2022-11-02 16:15 GMT   |   Update On 2022-11-02 16:15 GMT
  • கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

புதுச்சேரி:

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

Tags:    

Similar News