புதுச்சேரி

ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணியை செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்த காட்சி.

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி-மாரத்தான் போட்டி

Published On 2023-10-29 08:13 GMT   |   Update On 2023-10-29 08:13 GMT
  • கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
  • கோப்பை தன்னார்வலர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

மோட்டார் சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணி புதுவை கடற்கரை சாலையில் நடந்தது.

காந்தி சிலை அருகே பேரணியை செல்வகணபதி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

நகரத்தின் முக்கிய வீதிகளில் சென்ற பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளையும் கையில் ஏந்திய படி சென்றனர். புதுவை அரசு மற்றும் தன்னார்வலர் அமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டி நகரம் முழுவதும் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

மாரத்தான் கடற்கரை சாலை, பட்டேல் சாலை, அண்ணாசாலை, புஸ்சி வீதி வழியாக மீண்டும் கடற்கரை சாலையை அடைந்தது.

போட்டியில் முதலிடம் பெற்ற 5 பேருக்கு பரிசு, கோப்பை தன்னார்வலர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News