புதுச்சேரி

தேசிய திரைப்பட தலைவராக நியமனம்- நடிகர் மாதவனுக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து

Published On 2023-09-02 06:45 GMT   |   Update On 2023-09-02 06:45 GMT
  • மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
  • சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் மாதவன், தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

திரைத்துறையில் மாதவனுக்கு இருக்கும் பரந்துபட்ட அனுபவம் தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வளமை சேர்த்து ஆராக்கியமான வளர்ச்சியை கொண்டு வரும் என்றும் இந்த நிறுவனத்தை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன்.

மாதவன் இயக்கி நடித்த "ராக்கெட்ரி-த நம்பி எஃபெக்ட்" திரைப்படம் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News