புதுச்சேரி
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
- திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20-ந் தேதி நடைபெற்று வருகிறது.
- கவிஞர் ஆனந்த ராசன், தொழிலதிபர் பொற்செழியன், இளங்கோவன், ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20-ந் தேதி நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, செயலர் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம்,ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழ்மாமணி உசேன், ராஜா, என்ஜினீயர் சுரேசு குமார், சிவேந்திரன், கவிஞர் ஆனந்த ராசன், தொழிலதிபர் பொற்செழியன், இளங்கோவன், ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.