- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- அப்பகுதி பிரமுகர்களை அழைத்து சென்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டார்.
புதுச்சேரி:
உப்பளம் ெதாகுதிக்குட்பட்ட வரதப்பிள்ளை தோட்ட த்தில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்ப ணிகள் மேற்கொண்டு முகப்பு மண்டபம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை மூலம் நிதி பெற்று தரகோரி அப்பகுதி பிரமுகர்கள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிகை விடுத்தனர்.
இது அடுத்து அப்பகுதி பிரமுகர்களை அழைத்து சென்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டார்.
அதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நிதி அளிக்க ஒப்பு கொண்டனர். இதன் முதல் கட்டமாக கோவில் திருப்பணிக்கு கென்னடி எம்.எல்.ஏ. ரூ.20 ஆயிரம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேலு, கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் ஊர் பிரமுகர்கள் கோவில் பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர்.