புதுச்சேரி

பிரெஞ்சு இந்திய நற்பணி இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் நிறுவன தலைவர் சிவராஜ் பேசிய போது எடுத்த படம்.

பிரெஞ்சு இந்திய நற்பணி இயக்க ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-03-23 14:05 IST   |   Update On 2023-03-23 14:05:00 IST
  • புதுவையில் பிரெஞ்சு இந்திய நற்பணி இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் நடேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள விஜயேந்திரா ஓட்டலில் நடைபெற்றது.
  • இந்திய அரசிடம் புகார் அனுப்பப்படும் இந்தோ-பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி பஞ்சாலைகள் அழிக்கப்படக்கூடாது.

புதுச்சேரி:

புதுவையில் பிரெஞ்சு இந்திய நற்பணி இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் நடேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள விஜயேந்திரா ஓட்டலில் நடைபெற்றது.

பொது செயலாளர் சதாசிவ ரெட்டியார் வரவேற்று பேசினார்.

இதில் சுப்பிரமணி, கார்த்திகேயன், அருணகிரி, ரகுராமன் என்ற ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி, தம்பி ராஜேந்திரன், உதயகுமாரி, பாண்டுரங்கன், புருஷோத்தன் முன்னிலை வகித்தனர். சிவ.இளங்கோ, அரி, விஜய் வீரன், கலியமூர்த்தி உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து நிறுவன தலைவர் சிவராஜ் ஏற்புரை ஆற்றினார். பின்னர் புதுவை துணைநிலை கலெக்டரிடம் இந்தோ-பிரான்ஸ் சரித்திரம் கடந்த பல ஆண்டுகளாக இருட்டடிப்பு குறித்தும் சரித்திர சின்னம் கீழுர் அவமதிப்பு குறித்தும் விளக்கப்பட்டு. இந்திய அரசிடம் புகார் அனுப்பப்படும் இந்தோ-பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி பஞ்சாலைகள் அழிக்கப்படக்கூடாது.

இந்தியாவோடு இணைந்த மக்கள் புதுவை அரசால் பாதுகாக்கபட வேண்டும். இந்த நிலைகள் மீண்டும் மீண்டும் நீடித்தால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கே பிரச்சினைகள் தலைதூக்கும் என எச்சரிக்கப்பட்டன.

கனகன் ஏரி, வெள்ளவாரி ஓடை, குயில் ேதாப்பு, சிவாஜி சிலை கிழக்கு கடற்கரை சாலை ரோடு, தட்டாஞ்சாவடி ஓடை புதுவை அரசால் அழிக்கப் பட்டுவிட்டன. மத்திய அரசால் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் துணை தலைவர் ஏகாம்பரம் நன்றி தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News